Tuesday, 28 January 2014

சிம்ரன் வைத்த செல்ல பெயர்...?

பாலிவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு என்ட்ரி கொடுக்கும் வாணி கபூருக்கு நக்கலாக பெயர் சூட்டினார் சிம்ரன். பாலிவுட், மல்லுவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு படை எடுக்கும் ஹீரோயின்கள் பட்டியலில் புதிதாக இணைந்திருப்பவர் வாணி கபூர்.

ஆஹா கல்யாணம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.  இந்தியில் வெளியான பேண்ட் பாஜா பாரத் என்ற படத்தின் ரீமேக் இந்த படம். கோகுல் கிருஷ்ணா இயக்குகிறார். அதித்ய சோப்ரா தயாரிக்கிறார். தரண்குமார் இசை அமைக்கிறார். நானி ஹீரோ. இதுபற்றி வாணி கபூர் கூறியதாவது: தமிழில் பாலிவுட் ஹீரோயின்கள் நல்ல இடத்தை பிடித்திருக்கிறார்கள். அந்த பட்டியலில் நானும் இடம்பெறுவேன் என்று நம்புகிறேன்.

இப்படத்தின் ஆடியோ ரிலீஸில் முதன்முறையாக கலந்துகொண்டது மறக்க முடியாத அனுபவம் ஆகிவிட்டது. விழாவில் சிம்ரன் கலந்துகொண்டார். என்னை அவர்தான் அறிமுகப்படுத்தி பேசினார். குஷ்புவுக்கு இட்லி, சிம்ரனுக்கு இடையழகினு பட்டப்பெயர் இருப்பதுபோல் எனக்கும் பட்டப்பெயர் வைக்கும்படி அவரிடம் கேட்டார்கள். இந்த அர்த்தத்தை வேறுமாதிரி புரிந்துகொண்ட நான் எனக்கு மிளகா பஜ்ஜி பிடிக்கும் என்றேன். உடனே அருகில் இருந்த சிம்ரன் எனக்கு அறிவுரை சொன்னார். மிளகா பஜ்ஜி காரம்.

தமிழ்நாட்டில் முதலில் அறிமுகமாவதால் இனிப்பான பெயர் வைத்தால் நன்றாக இருக்கும். எனவே உனக்கு ஜிலேபி என்று பட்டப்பெயர் வைக்கலாம் என்றார். இரண்டுமே எனக்கு பிடித்தது. தமிழை ஓரளவு புரிந்துகொள்ளும் நான் விரைவிலேயே தமிழ் கற்றுக்கொண்டு சொந்த குரலில் டப்பிங் பேசுவேன். இவ்வாறு வாணி கபூர் கூறினார். 

தங்கைக்கு திருமணம்! சிம்புவின் ரூட் கிளியர்!

இயக்குனர் டி.ராஜேந்தர், உஷாவுக்கு சிம்பு, குறளரசன் என 2 மகன்கள், இலக்கியா என்ற மகளும் உள்ளனர். தந்தைபோல் சிம்பு நடித்து வருகிறார். குறளரசன் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். இலக்கியா எம்.பி.ஏ. படித்து வந்தார்.

 சிம்புவிடம் அவ்வப்போது அவரது திருமணம் பற்றி நிருபர்கள் கேட்டபோது, தங்கை இலக்கியா வுக்கு திருமணம் முடிந்த பிறகே திருமணம் செய்வேன் என்று கூறிவந்தார். இந்நிலையில் இலக்கி யாவுக்கும் ஐதராபாத்தை சேர்ந்த அபிலாஷ் என்ற பி.டெக் பட்டதாரிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

வரும் பிப்ரவரி 10ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணம் நடக்கிறது. அன்று மாலை அதே இடத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை டி.ராஜேந்தர் குடும்பத்தினர் செய்து வருகின்றனர். 

‘கோலி சோடா’ பலத்த வரவேற்புக்கு மத்தியில்...

விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘கோலி சோடா’ படத்திற்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்திருக்கிறது.

‘பசங்க’ படத்தில் நடித்த ஸ்ரீராம், பாண்டி, முருகேஷ், சாந்தினி, சீதா மற்றும் பலர் நடிக்க, ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான படம் ‘கோலி சோடா’. 24ம் தேதி இப்படம் தமிழகம் முழுவதும் வெளியானது.

விமர்சகர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் மத்தியிலும் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. இன்று முதல் 40 திரையரங்குகள் அதிகப்படுத்த இருக்கிறார்கள். இதனால் சந்தோஷத்தில் இருக்கிறது படக்குழு.

விநியோகஸ்தர்கள் மத்தியில் இப்படம் குறித்து கேட்ட போது, “கண்டிப்பாக விநியோகஸ்தர்களுக்கு 2014ம் ஆண்டின் முதல் லாபம் சம்பாதித்து கொடுக்கப் போகும் படமாக ‘கோலி சோடா’ அமைய இருக்கிறது. ஏனென்றால் படத்தின் பட்ஜெட் கம்மி என்பதால் படத்தினை குறைந்த விலைக்கு வாங்கினோம். மக்களின் கூட்டம் அதிகரித்து வருவதால் கண்டிப்பாக மிகப்பெரிய லாபமிருக்கும்” என்றார்கள்.

இப்படத்தினைத் தொடர்ந்து விஜய் மில்டன், சுசீந்திரன் இயக்கி வரும் ‘வீரதீர சூரன்’ படத்திற்கும், பாலாஜி சக்திவேல் இயக்கவிருக்கும் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.

பார்த்திபனும் விஜய் சேதுபதியும் இணையும் முதல் படம்!

பார்த்திபன் இயக்கி வரும் ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ படத்தில் விஜய் சேதுபதி கெளரவ தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

தான் இயக்கும் படங்களில் நாயகனாக நடித்து வந்த பார்த்திபன், இயக்குநர் பொறுப்பு மட்டும் போதும் என்று இயக்கி வரும் படம் ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’. முற்றிலும் புதுமுகங்கள் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தில் கெளரவ தோற்றத்திற்கு விஜய் சேதுபதியை நடிக்க வைக்க அணுகியிருக்கிறார் பார்த்திபன். உடனே நடிக்க ஒப்புக்கொண்டு நடித்துக் கொடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி.

இது குறித்து பார்த்திபன் தனது ட்விட்டர் தளத்தில் “’கதை திரைக்கதை வசனம் இயக்க’த்தில் நடிக்க வேண்டும் என்று கேட்ட மறுநாளே தளத்திற்கு வந்து நின்றார்.. Sorry, உட்கார்ந்தார் விஜய் சேதுபதி.அதுவும் காரில் வந்தால் நேரம் ஆகிவிடும் என பைக்கில் வந்தார்.


கார் கண்ணாடியின் வைப்பரில் சிக்காத இடத்தில் ஒட்டிக் கொள்ளும் பசும் பூவாய் ஒட்டிக் கொண்டது அவரது நட்பூ,” என்று கூறியுள்ளார்.

‘ரம்மி’ படத்ததின் முழு தகவல் - இயக்குநருடன்!

கோலிவுட்டில் அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்துவரும் விஜய் சேதுபதியின் நடிப்பில் வேகமாகத் தயாராகி வருகிறது ‘ரம்மி’.

“இந்த படத்துக்கு பெரிய கிப்ட் அப்படின்னா கமல் சார் இந்த படத்தோட இசையை வெளியிட்டது தான். படத்தோட டிரெய்லர், பாடல்களை எல்லாம் பாத்துட்டு ஒரு எதார்த்த சினிமா பாத்த ஃபீல் இருக்குனு பாராட்டினார். ரம்மி விளையாடியிருக்கேன். டிக் அடிக்கிறது மக்கள்கிட்ட தான் இருக்கு” என்று உற்சாகமாகப் பேசுகிறார் படத்தின் இயக்குநர் பாலகிருஷ்ணன். படத்தைப் பற்றி என்ன கேட்டாலும் சற்றும் யோசிக்காமல் ரம்மி விளையாட்டில் சீட்டுகளை அழகாக கோர்ப்பது போன்று வார்த்தைகளை கோர்க்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து..

‘ரம்மி’ படத்தை ஆரம்பித்த விதத்தைச் சொல்லுங்க?

நான் படிச்ச கல்லூரி புல்லாங்குறிச்சி கிராமத்துல இருந்தது. படிக்கிறப்போ நடந்த நிகழ்வுகள், ஏற்பட்ட அனுபவங்கள் எல்லாத்தையும் திரைக்கதையா மாத்தி இந்தப் படத்தை எடுத்திருக்கேன். கல்லூரியை முடிச்ச பிறகு இயக்குநர் லிங்குசாமிகிட்ட ‘ஆனந்தம்’ படத்தில் இருந்து ‘பையா’ படம் வரை தயாரிப்பு மேற்பார்வையாளராக வேலை செஞ்சேன். ஒரு நடிகனா ‘பட்டாளம்’ படத்துல நடிக்க ஆரம்பிச்சேன். ‘மெளன குரு’, ‘நான் மகான் அல்ல’, ‘தூங்கா நகரம்’ அப்படின்னு 10 படங்கள்ல நடிச்சிருக்கேன். இந்தக் கதையை இயக்கலாம்னு ‘பட்டாளம்’ படம் பண்ணினப்போ முடிவு பண்ணி, படத்தோட வசனகர்த்தா பழனிச்சாமிகிட்ட கதையை சொன்னேன். அவர் நல்லா இருக்குன்னு சொன்னதோட இந்த கதையோட என் பயணம் ஆரம்பிச்சுது. இந்த கதை மூலமா நாம இயக்குநர் ஆகலாம்னு முடிவு பண்ணினேன்.

விஜய் சேதுபதி இந்த படத்தோட திரைக்கதை ஒரு மேஜிக்னு சொல்லியிருக்காரே. அப்படி என்ன மேஜிக் காட்டியிருக்கீங்க?

படத்தலைப்புக்கு காரணமே படத்தோட திரைக்கதை தான். ரம்மி விளையாட்டு ரொம்ப சுவாரசியமா இருக்கும். விளையாட உட்காந்தோம்ன்னா எந்திரிக்க மனசே வராது. அதே மாதிரி தான் காதலும். ரம்மிங்கிறது ஆடி ஜெயிக்கணும். காதல்ங்கிறது போராடி ஜெயிக்கணும், ரம்மி விளையாட்டை பாத்தீங்கன்னா ரொம்ப ஜாலியா ஆரம்பிக்கும், நீ இந்த கார்டு போடு, ஏன் அந்த கார்ட்டை போட்ட அப்படினு போகும். அந்த சூடு பறக்குற விளையாட்டு தான் இந்த படத்தோட தலைப்பு.

அடுத்து என்ன வரப்போகுது, அடுத்து யார் எங்கே வரப்போறா அப்படிங்குற நிலைமை படத்துல வரும். அதான் இந்த தலைப்பு வைச்சேன். படத்தோட கதையில திடீர்னு ஜோக்கர் கூட சீரியஸாகும். அதே மாதிரி இந்த படத்துல ஒரு மெசேஜ் சொல்லியிருக்கோம். லவ் சம்பந்தப்பட்ட அந்த மெசேஜ் கண்டிப்பா பெரியளவில் பேசப்படும்.

விஜய் சேதுபதி, இனிக்கோ பிரபாகர், ஐஸ்வர்யா, காயத்ரி இப்படி பாத்திரங்கள் தேர்வு எல்லாம் வித்தியாசமா இருக்கே?

விஜய் சேதுபதி இந்த படத்துக்கு கிடைச்சது பெரிய கிப்ட். இமான், யுகபாரதி இரண்டு பேருமே விஜய் சேதுபதிகிட்ட இந்த மாதிரி ஒரு கதையிருக்கு, கேட்டு பாருங்கன்னு சொன்னாங்க. கதையை கேட்ட உடனே நான் பண்றேன்னு சொல்லிட்டார். ஷுட்டிங் ஸ்பாட்ல இருந்து டப்பிங் வரைக்கும் கூடவே இருந்தார். அவரை நான் அப்பெல்லாம் விஜய் சேதுபதியா பாக்கல. அவரோட கதாபாத்திரமான ஜோசப்பாதான் பார்த்தேன். இனிகோ பிரபாகர் படத்துல சக்தின்னு ஒரு கேரக்டர் பண்ணியிருக்கார். அவரும் பிரமாதமா பண்ணியிருக்கார்.

ஹீரோயின் கேரக்டருக்கு நீச்சல் தெரியணும், அதே நேரத்துல கண்ணு நல்லா பெருசா இருக்கணும்னு தேடினேன். அந்த கேரக்டருக்கு நிறைய பேரைத் தேடினேன். நான் தேடின காம்பினேஷன் ஐஸ்வர்யாவுக்கு இருந்துச்சு. நிச்சயம் இந்த படம் அவங்களுக்கு நல்ல பேர் வாங்கி குடுக்கும். மார்டன் கேரக்டரா பண்ணிட்டு இருந்த காயத்ரியை இதுல கொஞ்சம் நேட்டிவிட்டியோட நடிக்க வைச்சிருக்கேன். எதையும் மிகைப்படுத்தாம அந்த களத்துல என்ன நடக்கும் அப்படினு கமல் சார் சொன்ன மாதிரி ரொம்ப எதார்த்தமா பதிவு பண்ணியிருக்கேன்.

தயாரிப்பு பணி, நடிகன் எல்லாத்தையும் தாண்டி இயக்குநர் ஆவதற்கு என்ன காரணம்?

நான் இயக்குநரா வர்றதுக்கு, இயக்குநர் லிங்குசாமிகிட்ட பணியாற்றியது தான் காரணம். அவர்கிட்ட அவ்வளவு விஷயங்கள் கத்துக்கிட்டேன். என்னைப் பொறுத்தவரைக்கும் நாம எத நோக்கி போறமோ, அது கண்டிப்பா நம்மள நோக்கி வரும். புதுக்கோட்டைக்கு பஸ் ஏறினோம்ன்னா, பஸ் புதுக்கோட்டை நோக்கி போயிட்டு இருக்கும், புதுக்கோட்டை நம்மள நோக்கி வந்துட்டு இருக்கும். நம்மளோட பாதையில் உறுதியாக இருக்கோமாங்கிறது தான் முக்கியம். இயக்குநர் ஆகணும்னு முடிவு பண்ணி, அதுக்கு என்னை முழுமையாக அர்ப்பணிச்சேன். இதோ என்னோட படம் தயாராகி வெளியாகப் போகுது.

இப்போ இயக்குநர். தொடர்ந்து நடிகரா, இயக்குநரா?

என்னை நம்பி வரும் படங்களில் நடிப்பேன். ஆனால், நான் இயக்குற படங்களில் நடிக்க மாட்டேன். மற்றவங்க இயக்கி, நடிக்கிறாங்க. ஆனா, என்னை பொறுத்தவரை இயக்குநர் பொறுப்பு அப்படிங்குறது 100% கவனமா இருக்க வேண்டிய இடம். அதே மாதிரிதான் நடிகன் அப்படிங்குற பொறுப்பும். 1% குறைஞ்சா கூட ஸ்கிரீன்ல தெரிஞ்சுரும். நடிகன், இயக்குநர் அப்படினு ரெண்டு வேலையையும் பண்றது கஷ்டம்.

மந்திரமொழி

வார்த்தைகள் இல்லாத புத்தகம் மௌனம். ஆனால், வாசிக்க, வாசிக்க இதற்குள் வாக்கியங்கள். மௌனம் என்பது வெளிச்சம். நம்மை நாமே இதற்குள் தரிசிக்கலாம். மௌனம் என்பது இருட்டு. எல்லாத்துன்பங்களையும் இதற்குள் புதைக்கலாம். மௌனம் என்பது மூடி! இதை தயாரித்து விட்டால் எல்லா உணர்ச்சிகளையும் இதற்குள் பூட்டி வைக்கலாம். மௌனம் என்பது போதி மரம். இதுவரை உலகம் சொல்லாத உண்மைகளை இது போதிக்கும். மனம் என்பது தவம். இதில் ஆழ்ந்தால் அமைதி நிச்சயம்.

“மௌனம் என்பது வரம்” நம்மிடம் நாமே பெறுவது. இன்பம், துன்பம் இரண்டையும் மௌனம் கொண்டு சந்தித்தால் எப்போதும் இதயம் இயல்பாக இருக்கும். இதழ்களை இறுக மூடி நாம் நமக்குள் இறங்குவோம்!”

எங்கோ, எப்பொழுதோ படித்திதயத்தை வருடிய வரிகள், உலகத்திலேயே நமக்குப் பிடித்த குரல் நமது குரல்தான். நமக்குப் பிடித்த பேச்சு நமது பேச்சுதான். அதனால் நாம் பேச ஆரம்பித்தால் மணிக்கக்காகப் பேசிக்கொண்டே இருக்கிறோம். ஒரு வரியில் பேச வேண்டியதை ஒன்பது வரிகளில் பேசுகிறோம். நாம் பல சமயம் யாரிடம் பேசுகிறோம், எதற்காகப் பேசுகிறோம எந்த இடத்தில் பேசுகிறோம் எனபதைப் பற்றியே சிந்திப்பதில்லை. நமக்குத் தெரிந்ததை பேச வேண்டும் என்பது, மட்டுமே நமது இலக்கு. புத்திசாலி மற்றவர்களைப் பேசவிட்டு,, மௌனம் சாதித்து, தேவையான பொழுது மட்டும் பேசி பேசுபவர்களின் நட்பைப் பெறுகிறான். பேசுவதால் நம் இருப்பை பிறர்க்கு உணர்த்துகிறோம். நாம் ஒரு நாளில் பேசுகிற பேச்சை ஒலிநாடாவில் பதிவு செய்து அதையே நாம் கேட்டால் சில நேரங்களில் வருத்தப்படுவோம். நமது நாக்கு ஈரமுடையது.

நாவின் அமைப்பைப்போல் நம் சொல்லும் இரக்கத்தில் மலர்ந்த இன்சொல்லாக இருக்க வேண்டும். நிலைபெறும் நீங்கில் என் உயிரும் நீங்கும் – வள்ளலார். எல்லா உறுப்புகளையும் இரண்டாகப் படைத்த இறைவன், நாக்கை மட்டும் ஒன்றாகப் படைத்ததில் காரணம் “வரப்புயர” என்று சுருங்கப் பேசி வாழ்வதற்காகத்தான். இரட்டை நாக்கு உடையவர்களை உலகம் நம்புவதில்லை. பொய் சொல்ல முயன்றால் சுற்றியுள்ள பற்கள் நாக்கைக் கடிக்கும். பொய் பேசியபின் பிறர் அறியாமல் நாக்கைக் கடித்துக்கொள்கிறோமல்லவா? அதிகம் பேசாதவனை உலகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை உலகம் மதிக்கிறது. பேசாத ஞானியை உலகம் தொழுகிறது.

மௌனத்தின் வெளிப்பாடுகள் பல. கல்யாணப் பெண்ணின் மௌனம் சம்மதமாகிறது. கரை கடந்த இன்பத்தில் மனிதன் மௌனிக்கிறான். துன்பத்தின் உச்சியில் மௌனமே பேசுகிறது. மௌனம் இறைவன் மொழி, அது தட்சினாமூர்த்தி த்துவம். “பிள்ளை மதி செஞ்சடையான், பேசாப்பெருமையினான்” என்று, தாயுமானவர் தன் மௌன குருவைப் பாடுவார். “நீதி நடஞ்செய், ஏரின்ப நிதி, அதை ஓதி முடியாது என்று வள்ளலார் பாடுவார்.

“சும்மா இரு சொல்லற என்றதுமே அம்மா பொருள் என அறிந்திலமே” என்று, முருகன் அருணகிரிநாதருக்கு உபதேசித்த ம்திரமொழி மௌனம் தான். கல் ஆலின் கடை அமர்ந்து மௌனித்து உடல்மொழியால் (Body Language) சின் முத்திரை த்த்துவத்தை போதித்த தட்சினாமூர்த்தியை “வாக்கு இறந்த பூரணம் சொல்லாமல் சொன்னவன்” என்று திருவிளையாடற் புராணம் வர்ணிக்கும். அமைதி வேறு. மௌனம் வேறு. போருக்கு பின் அமைதி வரும். அமைதி மேலோட்டமானது. மோனம் உள்ளிருந்து வருவது. மௌனம் என்பது வார்த்தைகளற்ற நிலையல்ல. எண்ணங்கள் அற்ற நிலை. மௌனத்தை நம் முன்னோர்கள் “ஓம்” என்ற பிரணவ மந்திரத்தால் உணர்த்தினார்கள்.

ஓம் என்ற பிரணவத்தை = அ+உ+ம் என பிரிக்கலாம். (அ) அறிவாக, உள்ள இறைவனை, (உ) உயிராக உணர்கிற மனிதன், (ம்) பேரின்ப நிலையாகிய மௌனத்தில் ஆழ்கிறான் என்பது பிரணவப் பொருள். “நற்பூதி அணிந்த திருவடிவம் முற்றும் தோழி, நான் கண்டேன்! நான் புணர்ந்தேன்! நான் அது ஆனேன்!” வள்ளலார்.

இது அவசர உலகம். இயந்திர கதியில் மனிதர்கள். வாய்க்கும் வயிறுக்கும் போராட்டம். நின்று, நிலைக்க நேரமில்லை, வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. வாரம் ஒரு முறை தினசரிக் காலண்டரில் ஞாயிறன்று ஆறு நாட்களைச் சேர்த்து கிழிக்கிறோம். தேவை நிம்மதி. தேவை மன அமைதி. தேவை மகிழ்ச்சி. இது மௌன தவத்தால் கிட்டும்.

உடம்பு அசையாமல் யோகநிலையில் கட்டைபோல் தன்னை வைத்திருப்பது காஷ்ட மௌனம். அதாவது இம்மௌனத்தில் உடல் பேசாது (No body language). இரண்டாவது வாக் மௌனம். வாய்மூடி மௌனமாக இருத்தல். இதைத்தான் பொதுவாக மௌன விரதம் உள்நோக்குகிறான். கடவுளோடு பேசுகிறான் என்கிறோம். இந்த மௌனத்தை மேற்கொள்ளும் சிலர் கையில் நோட்புக் வைத்துக்கொண்டு பக்கம் பக்கமாக எழுதி அறுப்பார்கள். மௌனத்திலிருந்து பெறும் அகத்தாய்வையும் அனுமதியையும் இவர்கள் இழக்கிறார்கள். அடுத்து மனோ மௌனம். இதுவே தலைசிறந்த மௌனம். இதில் மனம் அலைபாயாத விச்ராந்தியாக இருக்கும். சலனமற மனமே மோனத்தன் நிறைநிலை. இந்த மௌனத்தில் மனிதன் தன்னை உள்நோக்குகிறான். கடவுளோடு பேசுகிறான்.

மௌன தவம் செய்பவன் தன்னைத்தானே சுய பரிசோதனை செய்து கொள்கிறான். அவனது புறக்கதவுகள் மூடி அக்கதவுகள் திறக்கின்றன. அவன் பேசாதபொழுது அவனுள்ளிருக்கும் இறைவன் பேசுகிறான். தனது நிறை, குறைகளை அவன் ஆராய்கிறான். அவனது பேராசை நிறை மனமாகிறது. சினம் பொறைமாயக மாறுகிறது. கடும்பற்று ஈகையாகிறது. முறையற்ற பால்கவர்ச்சி கற்பாக மாறுகிறது. வஞ்சம் மன்னிப்பாகிறது. அவன் அனைத்தையும் சமன் செய்து சீர்தூக்குகிறான். அவனது தன் முனைப்பு, அகந்தை அகன்று தான் பரம்பொருளின் அம்சம் என உணர்கிறான். முடிவு வாழ்க்கை கல்வியில் தேர்ச்சி.

“தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலாவே! ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே” வள்ளலாரின் பாடல் அவன் காதில் ஒலிக்கிறது. தான் இறைவனின் அம்சம் என்று உணர்ந்த மறுகணமே (யத்பாவம் த்த் பவதி) அவன் இறைவனது பேராற்றலையும், பேரறிவையும் பெறுகிறான். சாதனைகள் கைகூடுகிறது. அவன் மனம் நிறைகிறது.

மௌன நோன்பு இருவகைப்படும். ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டும் என்று மன உறுதியோடு சங்கற்பம் செய்து கொண்டு அவ்வேலை முடியும் வரை பேசாமல் இருப்பது. இது மனதையும், உள்ளாற்றலையும் சிதறாமல் பாதுகாக்கும். காரியம் வெற்றியுறும். இரண்டாவது ஆன்ம தூய்மைக்காக குடும்பம், பொருளாதாரம், வாணிபம் இவற்றில் விலகி நின்று நோன்பு எடுப்பது. இந்நோன்புதான் அகத்தாய்வுக்கு உதவும். அறிவின் இயக்கத்தில் சீரமைக்க உதவும் குண்டலினி யோகம், துரியாதீத தவம் போன்றவை மௌன தவமாகாது. அவை குறுகிய கால உளப்பயிற்சியாகும்.

ஜான்கேஜ் என்பவர் “மௌனம்” என்ற புத்தகத்தில் எழுதுகிறார், எந்த சப்தமும் வராத ஒரு அறையை ஆக்ஸஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கினார்கள். கேஜ் அதில் நுழைந்ததும் இரண்டு சப்தங்களைக் கேட்டார். ஒன்று இருதயம் இயங்குகிற சப்தம். அதாவது இரத்த ஓட்டத்தின் சப்தம். (Cardiac Echo) மற்றொன்று மனம் வேலை செய்கிற சப்தம். கேஜ் ஆச்சரியமாகச் சொன்னார். “இதுவரை நான் இந்த சப்தங்களைக் கேட்டதேயில்லை.”

மௌனம் அனுசரிப்பது எவ்வளவு கடினம் என்பதைப் பற்றி ஒரு கதையுண்டு. மூன்று துறவிகள் மௌனம் இருந்தனர். ஐந்து நிமிடங்கள் ஆயிற்று. முதல் துறவி மற்றொரு துறவியின் முகத்தில் கரித்தூளைக் கண்டார். “உன் முகத்தில் கரி” என்றார். இரண்டாம் துறவி “நீ பேசிவிட்டாய்” என்றார். மூன்றாம் துறவி “நான் மட்டும்தான் பேசவில்லை” என்றார். தமிழன்பனின் உள்ளொலியை மௌனமாக்க்கேளுங்கள். உன் வார்த்தைகளிலேயே மிக அழகானது எது? உதடு திறகாமல் பதில் சொன்னது மொழி. ஓசை இல்லாமல் பதில் சொன்னது மொழி, வார்த்தை இல்லாமல் பதில் சொன்னது மொழி.

“மௌனம்”